வவுனியா மாவட்டத்தில் அரச சார்பான நிறுவனங்களில் தொழில்புரியும் தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடலொன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்த இவ் ஒன்றுகூடலில் தற்போதைய அரசு செய்து வரும் பல்வெறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டிருந்ததுடன் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெற்றது.
இதன்போது வட மாகாணசபையில் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை, பெற்றோலிய கூட்டத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நீர்ப்பாசன சபை, இலங்கை போக்குவரத்துச்சேவை, சமுர்திச் அதிகார சபை ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.






