இலங்கையில் வருடாந்தம் 3500 பேர் தற்கொலை : உலகில் 10 லட்சம் தற்கொலைகள்!!

734

Suicide1

தற்கொலைகளை தடுக்கும் வகையில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 10ம் திகதி நினைவுகூறப்படவுள்ள தற்கொலைகளை தடுக்கும் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடத்திற்கு 3500 பேர் தற்கொலை செய்து கொள்வதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



தற்கொலைகளுக்கு அதிகம் விஷம் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உலகம் முழுவதும் வருடாந்தம் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.