20 இளைஞர்கள், 20 ஐபோன் : சொந்தமாக வீடு வாங்குவதற்கு சீன யுவதி கையாண்ட வழி!!

887

phone

சீனாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் இரு­பது இளை­ஞர்­களை காத­லித்து, அவர்­க­ளிடம் கைத்­தொலைபே­சி­களை அன்­ப­ளிப்­பாக பெற்­றதன் மூலம் சொந்­த­மாக வீடொன்றை வாங்­கி­யுள்ளார்.

ஸியோலி எனும் இந்த யுவதி, இரு­பது இளை­ஞர்­களை காத­லித்தார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தனக்­காக ஐபோன் 7 ரக தொலை­பே­சியை வாங்கித் தரு­மாறு தனது காத­லர்­களிடம் ஸியோலி கோரினாராம்.

இத் ­தொ­லை­பே­சி­களை சீன இணை­யத்­த­ள­மொன்றின் ஊடாக அவர் விற்­பனை செய்தார். இவ்­வாறு 20 காத­லர்­க­ளி­டமும் 20 ஐபோன் 7 தொலை­பே­சி­களை வாங்கி, அவற்றை மீள் விற்­பனை செய்­ததன் மூலம் 115,010 சீன யுவான்­களை (சுமார் 25 இலட்சம் ரூபா) ஸியோலி திரட்­டினார் என ‘பிரவுட் கியா­யோபா எனும் பெயரில் செயற்­படும் ஒருவர் இணை­யத்­த­ள­மொன்றில் தெரி­வித்­துள்ளார்.

இந்த யுவதி தொடர்­பான தக­வல்கள் சீன சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வரு­கின்­றன. இவரின் நடவடிக்கை மிக மோச­மானது என பலர் விமர்­சித்­துள்­ளனர். ஆனால், மற்­றொரு யுவதி கருத்துத் தெரி­விக்­கையில், “என்னால் ஒரு காத­லரைக் கூட தேடிக்­கொள்ள முடி­யாமல் உள்­ளது.

இந்த யுவதி எப்­படி இரு­பது பேரை ஒரே காலத்தில் காத­லித்து, அவர்கள் அனைவரிடமும் ஐபோன் தொலைபேசியையும் பெற்றுள்ளார்!” என வியப்புத் தெரிவித்துள்ளார்.