கௌதமி பிரிவு : உறவினர்களோடு ஆலோசிக்கும் கமல்!!

458

kamal

கமலும் கௌதமியும் பிரியப்போகிற விடயம் ஒரு வாரத்திற்கு முன்னர் எங்களுக்கே தெரியும் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒரு வருடகாலமாகவே இருவருக்குள்ளும் இடைவெளி இருந்து வந்ததாகவும், ஆனால் அதனை மறைத்து இருவரும் வாழ்ந்து வந்ததாகவும் நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், உன்னதமான திரைக்கலைஞன் கமலஹாசன். அவரது தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒருபோதும் அவரது கலைப்பணத்தை பாதிக்காது.

மேலும், கௌதமியின் அறிவிப்பு குறித்து பதில் சொல்லி, இந்த விடயத்தை பெரிதாக்க விரும்பவில்லை என்று கமல் கூறிவிட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு கமல் நேற்று செல்லவில்லை. கமலஹாசனின் நீலாங்கரை வீட்டில் அவரது உறவினர்களோடு சேர்ந்து மனம் விட்டு ஆலோசித்து வருகிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.