செப்டம்பர் மாத ராசி பலன்கள் – மிதுனம்!!

935

mithunam

‘‘மிதுனத்தன் வார்த்தை இனிமை’’ என்பதற்கேற்ப சிந்தனையிலும் பேச்சிலும் நடத்தையிலும் இனிமையை கொண்டுள்ள மிதுன ராசி வாசகர்களே சில நன்மைகள் விளையக்கூடிய வகையில் ராசிநாதன் புதன் சஞ்சரிக்கிறார். மாத ஆரம்பத்தில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் சுகஸ்தானத்திற்கு மாறும் போது மிக நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

சுபகாரகன் குருவும் மங்களநாயகன் செவ்வாயும் இணைந்து உங்கள் ராசியில் இருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆனால் அஷ்டம பாக்கியாதிபதி சனி ஐந்தில் அமர்வதால் பணவிரயம் ஏற்படக்கூடும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகள் உதவுவார்கள். அரசு சார்ந்த விஷயங்களில் சில சலுகைகளை பெற முடியாமல் போகலாம்.ஆனால் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும்.

வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். ஐந்தாமிடத்தில் உலவும் ராகுவாலும் ரண ருண ரோகஸ்தானாதிபதி செவ்வாய் தனஸ்தான ராசிக்கு மாறுவதாலும் வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பெண்களுக்கு மிகச்சிறப்பான பலன்கள் வந்து சேரும். சொத்து தொடர்பான பிரச்னைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். விரும்பிய பதவி கிடைக்கும்.

பரிகாரம் : புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். தேங்காய் தீபம் ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீகேசவாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : பெருமாளுக்கு துளசி தள அர்ச்சனை செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 15, 16 ஆகிய திகதிகளில் யாருக்கும் பிணை கையெழுத்திடாதீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வெள்ளி.
தேய்பிறை : புதன், வியாழன்.