செப்டம்பர் மாத ராசி பலன்கள் – கடகம்!!

580

katakam

“கடகம் விசுவாசம்’’ என்பதற்கேற்ப தங்களுக்கு உதவி செய்தவர்களை எக்காலத்திலும் மறக்க மாட்டீர்கள். சில நன்மைகளை அளிக்கும் வகையில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை இழப்புகள் ஏற்படலாம்.

சில பொன்னான வாய்ப்புகள் தேடி வந்து வாழ்வை வளமாக்கும். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். சுகஸ்தானத்தில் இருக்கும் சனியால் வேலை செய்யும் இடத்தினில் சில பிரச்னைகள் வரலாம். சகாக்களின் உதவியோடு அதனைச் சமாளிப்பீர்கள்.

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். தீவிர முயற்சி களின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். உடன் பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். பெண்களுக்கு நாவடக்கம் தேவை.

கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம் : திங்கள் கிழமைதோறும் சந்திர ஹோரையில் ( காலை 6-7) சிவன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீசிவஸ்வரூபமங்களாயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : முல்லை மலரை அம்மனுக்கு கொடுத்து அர்ச்சனை செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 17, 18 ஆகிய திகதிகளில் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வெள்ளி
தேய்பிறை : ஞாயிறு, வியாழன், வெள்ளி.