வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான நேற்று 05.11.2016 சூரன் போர் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலைமுதல் அபிசேகம் மற்றும் யாகம் என்பன மலையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் சிவஸ்ரீ சங்கரசர்மா தலைமையில் இடம்பெற்று மாலை நான்கு மணியளவில் முருகபெருமானுடன் சூரபத்மன் மலையடிவாரத்தில் மோதிகொண்ட சூரன் போர் வெகு சிறப்பாக இடம்பெற்றது .









