செப்டம்பர் மாத ராசி பலன்கள் – தனுசு!!

571

thanusu‘‘நேர்க்கோடு வில்’’ என்பதற்கேற்ப செய்யும் செயலிலும் குறிக்கோளிலும் அங்கிங்கு கவனம் சிதறாதபடி நேர்க்கோட்டு சிந்தனையில் இருக்கும் தனுசு ராசி அன்பர்களே ராசிநாதன் குருவின் பார்வை, மங்களகாரகன் செவ்வாயின் பார்வை, தனதைரியாதிபதி சனியின் பார்வை, ராகுவின் பார்வை என மிக நல்ல பலன்களை அனுபவிக்கும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள்.

மிக முக்கிய கிரகங்களான செவ்வாய், குரு, சனி, ராகு திரேக்காணத்தில் அமர்வதும் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்னை கட்டுக்குள் அடங்கி இருக்கும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும்.

தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பெண்களே நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள்.

உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும்.

பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம்.

பரிகாரம் : வியாழன்தோறும் குருவை வணங்குங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஆஞ்சநேயாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 2, 3, 29, 30 ஆகிய திகதிகளில் இரவுப் பயணகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி.
தேய்பிறை : ஞாயிறு, வியாழன், வெள்ளி.