செப்டம்பர் மாத ராசி பலன்கள் – கும்பம்!!

454

kumbam‘‘கும்ப மனம்’’ என்பதற்கேற்ப அடுத்தவரின் மனதை எளிதில் புரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள் நீங்கள். ஒன்பதாம் இடத்தில் ராகுவுடன் இணைந்த ராசிநாதன் சனி, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தனாதிபதி குரு இருப்பது சிறப்பு. நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். சிலருக்கு சந்தான பாக்கியம் கிட்டும். வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.

பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உத்யோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம்.

கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. பெண்களுக்கு பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.

மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். சில புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ், பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.

மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும்.

பரிகாரம் : சிவன் கோயிலில் உள்ள பைரவரை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : ‘‘ஓம் ஸ்ரீசசிசேகராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் சிவாலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாத்தி வழிபடவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 6, 7 ஆகிய திகதிகளில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி.
தேய்பிறை : புதன், வியாழன், வெள்ளி.