செப்டம்பர் மாத ராசி பலன்கள் – மீனம்!!

599

meenam‘‘நழுவும் மீன்’’ என்பதற்கேற்ப எந்த பிரச்னையிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள் நீங்கள். தற்போதிருக்கும் கிரக சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். கடவுளின் அருள் பலத்தால் பொருளாதார வளம் சிறப்படையும்.

காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு. தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். உத்யோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.

தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தைரியாதிபதி சுக்கிரன் ராசியைப் பார்க்கும் அமைப்பு அமைந்துள்ளதால் வழக்கில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.

மூன்றாம் வீட்டுக்குரியவர் ஏழில் உலவுவதால் சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.

அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினர் வளர்ச்சி சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மாத முற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும். சிலருக்கு வயிறு உபாதைகள் வந்து மறையும்.

பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஷீரடி சாய் கோயிலுக்கோ அல்லது ஏதேனும் மகான்களின் ஜீவசமாதிகளுக்கோ சென்று வணங்கி வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : கோளறு பதிகத்தை தினமும் கூறவும்.

சிறப்பு பரிகாரம் : சிவாலயத்தில் உள்ள நவகிரகங்களுக்கு நெய் தீபம் ஏற்றவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 8, 9, 10 ஆகிய திகதிகளில் பேச்சில் கடுமை வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : திங்கள், புதன், வெள்ளி.
தேய்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி.