இலங்கையை நோக்கி படையெடுக்கும் ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள்!!

745

tourist

கடந்த ஒக்டோம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 13.7 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் ஜேர்மன், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50,419 ஆகும்.

நடப்பாண்டின் முதல் 10 மாதங்களிலும் இலங்கைக்கு 1.4 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளனர். இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 14.6 மில்லியன் அதிகரிப்பாக கருதப்படுகின்றது.