பெண்களே கத்தியுடன் வெளியே செல்லுங்கள் : ஷில்பா ஷெட்டி!!

666

silpa

பெண்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்புக்கு கத்தி எடுத்து செல்ல வேண்டும் என்று பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஷில்பா ஷெட்டி சமூகத்தில் சிலர் கேவலமான மனநிலையில் இருக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி பத்திரிகைகளில் படிக்கும் போது விரக்தி ஏற்படுகிறது.



இதுபோன்ற சமூகத்தில் வாழ்கிறோமே என்று கவலை ஏற்படுகிறது. பொலிசார் மிகவும் அசாதாரணமாக தங்கள் கடமையை செய்கின்றனர்.

எல்லா பொறுப்பையும் அவர்களின் தோள்களிலேயே சுமத்தி விடக் கூடாது. அவர்களால் எவ்வளவுதான் தாங்க முடியும். பெண்கள் சுயசார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இதனால் வெளியில் செல்லும் போது பெண்கள் பாதுகாப்புக்கு கத்தி எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.