வவுனியா மாவட்ட தேசிய இலக்கிய கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று(15.11.2016) காலை 9 மணிக்கு வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், கௌரவ விருந்தினராக வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி. சா.கர்ணன் மற்றும் தமிழ்மணி அகளங்கன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலை இலக்கிய போட்டி நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இன் நிகழ்வுகள் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீரசிங்கம் பிரதீபன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.












