குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!

419

rekha-mohan

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. மேலும் இவர் பூஜை போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ந்த இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கேரளாவை சேர்ந்த இன்னொரு பிரபல சீரியல் நடிகை ரேகா மோகன் (வயது 45) என்பவரும் மர்மமான முறையில் கடந்த ஞாயிறன்று இறந்துபோனார்.

இந்நிலையில் இவரும் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தற்போது உறுதிசெய்துள்ளனர்.

மேலும் புற்றுநோய் மற்றும் குழந்தை இல்லாததால் இவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தள்ளனர்.

திருச்சூரில் அள்ள ஷோபா சிட்டி அபார்ட்மென்ட்டில் வசித்து வந்த ரேகா கடந்த சனிக்கிழமை பிணமாகக் கிடந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். ரேகா டைனிங் டேபிளில் சாய்ந்தபடி இறந்து கிடந்தார்.

ரேகாவின் உடல் அருகே ஒரு கிளாஸில் குளிர்பானம் இருந்தது. இதனால் அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

ரேகா கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

ரேகாவுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் ரேகாவின் கணவர் மோகன் துபாயில் வேலை செய்து வருகிறார்.

அவர் இரண்டு நாட்களாக ரேகாவுக்கு போன் செய்தும் எடுக்காததால் அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் ரேகாவின் வீட்டிற்கு சென்றபோது அவர் பிணமாகக் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.