வவுனியாவில் நேற்று (15.11.2016) இரவு 11 மணியளவில் ஓமந்தை பொலிசார் வவுனியா பொலிசாருடன் இணைந்து மேற்கொண்ட வீதிரோந்து நடவடிக்கையின்போது நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஹயஸ் வானில் இருக்கைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் மாதகல் பகுதியிலிருந்து கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 70 கிலோவிற்கு அதிகமாக கேரளா கஞ்சாவினை கைப்பற்றியதுடன் வானில் பயனம் செய்த 8 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.











