இலங்கையர்கள் சிலர் இந்தோனேசியாவில் கைது!!

928

ind

இந்தோனேசியா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் உட்பட்ட 106 பேர் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த தகவலை இந்தோனேசிய ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.

இதில் 7 இலங்கையர்களும் அடங்குகின்றனர். சோமாலியா, சூடான், மியன்மார், ஈராக் நாட்டவர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர். இந்த அகதிகள் படகில் ஏறும் போது கைது செய்யப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவிததுள்ளனர்.

இதனையடுத்து 106 அகதிகளும் இடைத்தங்கல் முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.