வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரியில் கடந்த 2006.11.18 அன்று இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5மாணவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரியில் இன்று (18.11.2016) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
வெளிக்களப் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றது. இதனையடுத்து மாணவர்கள் சிலர் நிலத்தில் படுத்தபோது. நிலத்தில் படுத்த மாணவர்கள் இராணுவத்தினர் தம்வசம் வருமாறு அழைத்து அவர்களை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் களவாஞ்சிக்குடியைச் சேர்ந்த இராமச்சந்திரன் அச்சுதன் (வயது 25) , சுந்தரலிங்கம் ஐங்கரன் (வயது 21), திருமலையை சேர்ந்த சித்திரவேல் கோபிநாத் (வயது 22), மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சித்திக் அசான் நிஹான் மொகமட் ( வயது 22) , வவுனியாவைச் சேர்ந்த திருநாவுக்கரசு சிந்துஜன் (வயது 21) ஆகிய மாணவர்களே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களின் நினைவுதினம் இன்று விவசாயக் கல்லூரியில் அனுஸ்டிக்கப்பட்டதுடன் இரத்ததான நிகழ்வு, தாக சாந்தியும் இடம்பெற்றது.
10 வருடங்கள் கடந்தும் இது வரை இவர்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை என மாணவர்கள் தங்களது ஆதகங்களை வெளியிட்டனர்.









































