இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு புகலிடம் கோரிய அஜிதன் யுவராஜன் என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார்.
சிட்னியில் வசித்து வந்த இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் நேற்று திடீர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அஜிதன் இயற்கை மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அஜிதனின் உறவினர்கள் யாரும் அவுஸ்ரேலியாவில் இல்லாத நிலையில் இஅவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுசெல்வதா அல்லது அவரது உறவினர்களை இங்கு வரவழைப்பதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
‘மெராக்’ கப்பல் மூலம் இ 2013 ஆம் ஆண்டு அஜிதன் அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரியமை குறிப்பிடத்தக்கது.






