மல்லிகா ஷெராவத் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!!

544

www.hdnicewallpapers.com

பொலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது பிரான்ஸில் மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள மல்லிகா ஷெராவத், தனது நண்பருடன் தலைநகர் பாரிஸில் தங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக, அவர் வெளியில் சென்று விட்டு மீண்டும் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பியுள்ளார்.

இதன்போது, முகமூடி அணிந்த சிலர் மல்லிகா ஷெராவத்தைத் தாக்கி கண்ணீர்ப்புகை ஸ்ப்ரே செய்து கைப்பையைக் கொள்ளையடிக்க முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அமெரிக்க நட்சத்திரமான கிம் கர்தாஷியன் மீதும் இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மல்லிகா ஷெராவத் தரப்பிலிருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.