பேராசையால் பட வாய்ப்பை இழந்த பார்வதி ஓமனக்குட்டன்!!

507

parvathy-omanakuttan

தமிழில் அஜித் நடித்த பில்லா2 படத்தில் நாயகியாக நடித்தவர் பார்வதி ஓமனக்குட்டன். முதல் படமே பெரிய நாயகருடன் நடித்து விட்டதால், ஓவர் பில்டப் கொடுத்தார்.

ஆனால் படத்தில் அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அடுத்து படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இதனையடுத்து சென்னைக்கும் கேரளாவுக்கும் அலைந்து கொண்டிருந்தவர் பின் கேரளாவிலேயே தங்கி விட்டார். இந்நிலையில் தான் நதிகள் நனைவதில்லை என்றொரு படத்துக்காக மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வரப்பட்டார் பார்வதி.

அந்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கும் முன்பே பப்ளிசிட்டி செய்து கொண்டார். மேலும் படத்தின் கதை சொல்லப்பட்டு சம்பள பேச்சுவார்த்தை நடந்தபோது, ஒரே செக்காக 20 லட்சம் தர வேண்டும் என்று தடாலடியாக கூறிவிட்டாராம்.

இதனால் ஆடிப்போன படாதிபதிகள் சத்தமே இல்லாமல் பார்வதியை கழட்டிவிட்டு வேறொரு நடிகையை புக் செய்து விட்டார்களாம். தொடர்ந்து படப்பிடிப்பும் நல்லபடியாக நடந்து கொண்டு வருகிறதாம்.