இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உயிரினம்!!

1405

 
இலங்கையில் தனித்தன்மை வாய்ந்த புதிய வகையான 4 தேள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறைசார் பேராசிரியர் கித்சிறி ரணவக்க, சுற்றுச் சூழல் விஞ்ஞானி வீ.கே சஞ்சீவ ஜயரத்ன மற்றும் செக் குடியரசின் விலங்கியல் விஞ்ஞானி பிராங்க் செக்கோவாரிக் உள்ளிட்ட ஆராய்ச்சி குழுவினரே குறித்த தேள்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் Charmus saradieli, Reddynus ceylonesis, Ressyanus jayarathnei மற்றும் Reddyyanus ranawanai ஆகிய விஞ்ஞானப் பெயர்களைக் கொண்ட தேள்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செக் குடியரசின் விலங்கியல் விஞ்ஞானி பிராங்க் செக்கோவாரிக்கின் யோசனையின் படி இவற்றிற்கு Charmus saradieli எனப் பொதுப் பெயரிடப்பட்டுள்ளது.

1 2 3 4