வடக்கு மக்களின் தேவைகள் தொடர்பில் தெற்கு மக்களிடம் உள்ள தவறான நிலைப்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இருந்த தவறான புரிந்துணர்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது நாட்டுக்கு பாதகமான முடிவுகளை கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரு தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் வடக்கிலுள்ள பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என, விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





