தமது காலத்தையும் பணத்தை மற்றவர்களுக்காக செலவு செய்து தானங்களை வழங்க விரும்பும் மனிதர்கள் அதிகளவில் வாழும் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான கோல் அப் நிறுவனம் 146 நாடுகளை அடிப்படையாக கொண்டு இது தொடர்பாக நடத்திய ஆய்வுகளை நடத்தியுள்ளது.
இது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான அறிகுறியை வெளிப்படுத்துவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மியன்மார், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் இருக்கும் நாடுகளாகும்.
இலங்கையர்கள் பின்பற்றும் மதங்களே அவர்கள் உதவும் மனநிலைமைக்கு காரணம் எனவும் இலங்கையில் பௌத்தம் மற்றும் இந்து மதங்கள் பெருமளவில் பின்பற்றப்படுவதாக கோல்அப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இரண்டு மதங்களும் தானம் வழங்குவதை ஊக்குவிக்கின்றன. இலங்கை மக்கள் எப்போதும் முகத்தில் சிரிப்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பின்நிற்பதில்லை எனவும் கோல் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு மாத காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக மக்களின் 1.4 பில்லியன் மக்கள் சமூக சேவைகளுக்கு நிதி வழங்கியுள்ளனர். ஒரு பில்லியன் மக்கள் சமூக சேவைகளுக்காக உழைப்பு ரீதியான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
2.2 பில்லியன் மக்கள் அனாதரவாக இருக்கும் நபர்களுக்கு உதவியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.






