பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவர்களின் முடியை கத்தரித்து அவர்களின் சேர்ட் பைகளில் வைத்த ஆசிரியர்!!

528

hair

பரீட்­சையின் போது வினாக்­க­ளுக்கு விடை­களை எழுதிக் கொண்­டி­ருந்த மாண­வர்­களின் தலை ­முடியை ஆசி­ரியர் ஒருவர் கத்தரித்து அந்த முடி­களை அம் மாண­வர்­களின் சேர்ட் பைக்குள் திணித்த சம்­பவம் பதுளை பிர­தேச பாட­சாலை ஒன்­றில் ­நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி பாட­சா­லையில் ஆண்டு 9க்கான தவணைப் பரீட்­சைக்கு தோற்­றி­யி­ருந்த மாண­வர்­களில் சிலர் தலை ­மு­டியை வளர்த்­தி­ருந்­த­தனால் பரீட்­சையின் மேற்­பார்வை கட­மை­களில் ஈடு­பட்­டி­ருந்த ஆசி­ரியர் ஒரு­வரே இவ்­வாறு அவர்­களின் தலை­மு­டியை கத்தரித்து, அவர்­களின் மேலாடைப் பைக்குள் திணித்­துள்ளார்.

இவ்­வாறு ஆசி­ரியர் நடந்து கொண்­டதால் தங்­க­ளது மன­நிலை பாதிக்­கப்­பட்டு பரீட்­சையில் கேட்­கப்­பட்ட வினாக்­க­ளுக்கு விடை­களை எழுத முடி­யாமல் போய்­விட்­ட­தாக அம் மாண­வர்கள் தெரி­வித்­தனர்.

இதுபற்றி மாகாண கல்வித் திணைக்­கள அதி­காரி ஒரு­வ­ரிடம் வின­வியபோது, முறைப்­பாட்­டு எழுத்து மூல­மாக, சமர்ப்­பிக்­கப்­படும் பட்­சத்தில் குறிப்பிட்ட ஆசிரியருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.