கர்ப்பிணியின் பின்புறத்தை பிளேட்டினால் வெட்டிய நபர் : வைத்தியசாலையில் பெண்ணுக்கு 8 தையல்கள்!!

1377

blade

மஹரகம நகரில் ஆறுமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரின் பிருஷ்டத்தை பிளேட் ஒன்றினால் வெட்டியதாக கூறப்படும் நபரொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது.

மகரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இச் சந்தேக நபர் நேற்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, காயமடைந்த பகுதியில் எட்டு தையல்கள் இடப் பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹரகம நகரிலுள்ள பஸ் நிலையத்தில் இக்கர்ப்பிணிப் பெண் பஸ்ஸொன்றில் ஏறிய போது அவரின் பின்னால் வந்த குறித்த சந்தேக நபர் பிளேடினால் அவரது பின்பகுதியை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மஹரகம – தெஹிவளை வீதியில் வைத்து சந்தேகநரை கைது செய்ததாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி – கலவான பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபராவார். இதற்கு முன்னரும் மஹரகமவில் வைத்து சட்டக் கல்லூரி மாணவி மற்றும் வானொலி அறிவிப்பாளரொருவரினதும் பிருஷ்டங்களை வெட்டியவரும் இவரே என பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.