வவுனியா ஓமந்தை பொலிசாரால் முதிரை மரக்குற்றிகள் பறிமுதல்!!

879

 
வவுனியா சேமமடு பகுதி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுரேஸ் இந்திக்க சில்வா தலமையிலான குழுவினர் இன்று (25.11.2016) காலை 10.05 மணிக்கு சேமமடு அலகல்ல பகுதியில் 9 முதிரைக்குற்றிகளை வாகனத்துடன் சாரதியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

பல நாட்களாக குறித்த நபர் சட்டவிரேதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் கைப்பற்றப்பட்ட இரண்டரை லட்சம் பெறுமதியான 9 முதிரைக் குற்றிகளையும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

1 dsc_1172 dsc_1177 dsc_1179 dsc_1181 dsc_1186