ரயிலுடன் மோதிய கார் : ஐவர் பலி!!

544

accident

வாத்துவ – பெந்தரமுல்லை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை 03.30 அளவில் காரொன்று ரயிலுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.