யாழில் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு : யாழ். கண்ணாதிட்டி சந்தியை பரபரப்பாக்கிய சம்பவம்!!

496

bike

யாழ். புற­ந­கரப் பகு­தியில் இளைஞர் ஒருவர் செலுத்­திய ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்­கி­ளுக்குள் திடீ­ரென வெளிப்­பட்ட ஒரு­ பாம்­பினால் கண்­னா­திட்டிச் சந்­தியில் ஒரு மணி­நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

யாழ். நக­ருக்கு பணி நிமித்தம் சுமார் ஒரு மணி­ய­ளவில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்­கிளில் பய­ணித்­துள்ளார். இதன்போது ஒரு பாம்பு அசை­வ­தனை அவ­தா­னித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து மோட்டார் சைக்­கிளை நிறுத்தி பாம்­பினை அகற்ற முயன்­றுள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரம் போரா­டியும் முடி­யா­மல்­ போ­கவே மோட்டார் வண்டி திருத்­துனர் வர­வ­ழைக்­கப்­பட்டார்.

அவரோ மோட்டார் சைக்­கிளின் பாகங்­களை கழற்றி பாம்­பினை விரட்ட முயன்றார். சைக்­கிளின் ஒவ்­வொரு பாகங்­களை கழற்ற பாம்­பா­னது மறு­மு­னைக்கு நகர்ந்த வண்­ணமே இருந்­தது.

இறு­தியில் சுமார் ஒரு மணி­நேர போராட்­டத்தின் பின்னர் மோட்டார் சைக்­கிளில் இருந்து பாம்பு அகற்­றப்­பட்­டது. இதன்கார­ண­மாக சிறிது நேரம் கண்ணாதிட்டிச் சந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.