அன்பிற்கும் நட்பிற்குமான வலயமைப்பினரால் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு வவுனியா இறம்பைக்குளம் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிர்வாக உறுப்பினர்களான சிவராசா பிரதீப், ரவீந்திர டீ சில்வா, சிவில் சமூக செயற்பாட்டாளர் இ. இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரையும் ‘பாராபட்சமற்ற சமூகத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.










