வவுனியாவில் இன்று (02.12.2016) இரவு 8.00 மணியளவில் புட்சிட்டிக்கு அருகே இ.போ.ச பேரூந்து மீது தாக்குதல் நடாத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து மீது வவுனியா புட்சிட்டிக்கு அருகே இன்று இரவு 8.00 மணியளவில் இருநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக இரு சந்தேகநபர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும் இச் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












