வவுனியா பொது வைத்தியசாலையில் கடமைபுரியும் ஆண் தாதிய உத்தியோகத்தர் மீது நேற்று இரவு (01.12.2016) கடமைக்கு சென்றபோது வைத்தியசாலையின் விடுதியிலுள்ள வளவிற்குள் வைத்து தலைக்கவசம், ஜக்கட் அணிந்த இனந்தெரியதாக நபர் ஒருவர் பின் தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த தாதிய உத்தியோகத்தர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரை இன்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கைது சம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவிய போது..
இன்று எமது உத்தியோகத்தரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அவரை விடுதலை செய்ததாக தெரிவித்தார்.






