ஒருநாள் கோடீஸ்வரர் : டெக்ஸி சாரதியின் வங்கிக் கணக்கில் 9800 கோடி ரூபா வைப்பீடு!!

611

taxi-driver

இந்தியாவைச் சேர்ந்த டெக்ஸி சாரதி ஒருவர், தனது வங்கிக் கணக்கில் 9800 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான தொகை வைப்பிலிடப் பட்டுள்ளதாக அவரின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் காட்டப் பட்டுள்ளதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி யடைந்தார். ஆனால், அப் பணத்தை அவர் அனுபவிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வாடகைக் கார் சாரதி யான பல்விந்தர் சிங், பாட்டியாலா ஸ்டேட் வங்கியின் கிளையொன்றுக்குச் சென்று பணப்பரிமாற்றம் செய்த பின்னர் வீடு திரும்பினார்.

அதன்பின் அவரின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் நிலுவை மீதியை பார்வை யிட்டபோது, அவரின் கணக்கில் 98,05,95,12,231 இந்திய ரூபா, அதாவது சுமார் 9,800 கோடியே 95 இலட்சம் இந்திய ரூபா (21256 கோடி இலங்கை ரூபா) வைப்பிலிடப்பட் டுள்ளதாக அதில் காட்டப் பட்டிருந்தது. தனது கணக்கில் பொதுவாக சுமார் 3,000 ரூபாவே மிகுதியாக இருக்கும் என பல்விந்தர் சிங் கூறுகிறார்.

இந்நிலையில், 98 பில்லியன் ரூபா மிகுதியாக உள்ளதாக காட்டப் பட்டுள்ளதால் குழப்பமடைந்த பல்விந்தர் சிங், மறுநாள் குறித்த வங்கிக் கிளைக்குச் சென்று விசாரித்தார்.

ஆனால், அங்கு அவருக்கு ஒரு கோடி ரூபாவும் கிடைக்கவில்லை. மாறாக புதிய கணக்குப் புத்தகமொன்றை வங்கி அதிகாரிகள் வழங்கினராம்.

அந்த வங்கியின் முகாமையாளர் சந்தீப் கார்க் இது தொடர்பாக கூறுகையில், ஊழியர் ஒருவரின் தவறினால் இந்த குழப்பம் ஏற் பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வீந்தர் சிங்கின் கணக்கில் வைப்புத் தொகையை 200 ரூபாவை பதிவு செய்வதற்காக 11 எண்கள் கொண்ட, வங்கியின் பொதுக் கணக்கு இலக்கத்தை வைப்புத் தொகையாக ஊழியர் ஒருவர் பதிவு செய்து விட்டதாக வங்கியின் முகாமையாளர் சந்தீப் கார்க் தெரிவித்துள்ளார்.