நண்பன் ஒருவருடன் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணையடியில் தளவாய் என்ற இடத்தை சேர்ந்த தயானந்தன் மிறோஜன் (வயது 12) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணையடியில் உள்ள உறவினர்களின் வீட்டில் சில காலமாக வசித்து வந்த சிறுவன், பிரிதொரு சிறுவனுடன் நேற்று (03.12.2016) நீராடச் சென்ற நிலையிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கிராம மக்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திய சாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






