பாகிஸ்தான் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினாலே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியதாக கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் இருந்து சிட்ரல் நோக்கி 48 பேருடன் பயணித்த விமானம் அபோட்டாபாத் அருகே மலையில் ஒன்றில் நேற்று விழுந்து நொறுங்கியது .
குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் விமானியினால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குறித்த விமானத்தில் இருந்த 48 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்காகம் அறிவித்துள்ளது.












