காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது ஏன் : சரணடைந்த காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

736

தாம்பரம் அருகே காதலி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சணடைந்த காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் சோனியா (23). பிளஸ் 2 முடித்துவிட்டு, தாம்பரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டு அருகே வசித்து வருபவர் சிகாமணி என்பவரின் மகன் பிரசாந்த் (24). இவர், டிப்ளமோ முடித்து விட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்தார்.

இருவரது வீடும் அருகருகே உள்ளதால், சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தினமும் காலை பிரசாந்த் வேலைக்கு செல்லும் போது சோனியாவை தனது பைக்கில் அழைத்து சென்று வந்துள்ளார்.

இது நாளடையில் காதலாக மாறி உள்ளது. இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் காதலி சோனியாவின் கழுத்தை கத்தியால் பிரசாந்த் அறுத்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பீர்க்கன்காரணை பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சோனியாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், அங்கிருந்து தப்பி ஓடிய பிரசாந்த் பீர்க்கன்காரணை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. விசாரணையில், பிரசாந்த் அளித்த வாக்குமூலம் பற்றி பொலிசார் கூறியதாவது:

சோனியாவும், பிரசாந்தும் ஒரே தெருவில் வசித்து வந்தனர். பிளஸ் 2 படிக்கும் போதில் இருந்தே சோனியாவை பிரசாந்த் காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதமாக சோனியா பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். பிரசாந்த் போன் செய்தால் சோனியா எடுப்பதில்லை. இரவு நேரத்தில் எந்நேரமும் போன் வெயிட்டிங்கிலேயே இருந்துள்ளது.

இதனால் பிரசாந்துக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இதுபற்றி சோனியாவிடம் பிரசாந்த் கேட்டுள்ளார். அதற்கு சோனியா இப்போதே என் மீது சந்தேகப்படுகிறாயே திருமணம் செய்தால் என்னுடன் எப்படி குடும்பம் நடத்துவாய் என்று கேட்டு கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதன்பிறகு பிரசாந்த் போன் செய்தால் முற்றிலுமாக சோனியா தவிர்த்து வந்துள்ளார். இதனால் சோனியா வேலை பார்த்த கடைக்கு பிரசாந்த் சென்றுள்ளார்.

அப்போது, கடை அருகே ஒரு இளைஞனுடன் சோனியா பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் பிரசாந்த் விரக்தி அடைந்தார். இதுகுறித்து சோனியாவிடம் அவர் கேட்டுள்ளார். ‘‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை, இதேபோல் என்னை தொந்தரவு செய்தால் பொலிசில் புகார் கொடுப்பேன்’’ என சோனியா தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தியுடன் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார் பிரசாந்த். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6.45 மணிக்கு பிரசாந்த் பைக்குடன் சோனியாவை அழைத்து செல்ல பெருங்களத்தூர் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது சோனியா, வேறு ஒரு இளைஞனுடன் பஸ்சில் வந்து இறங்கி உள்ளார்.

உடனே பிரசாந்த் வழக்கம் போல் சோனியாவிடம் சென்று, ‘‘உன்னிடம் பேசணும் பைக்கில் செல்லலாம் வா’’ என்று அழைத்துள்ளார். இதற்கு சோனியா வர மறுத்து, உன்னிடம் பேச பிடிக்கவில்லை, நீ எனக்கு வேண்டாம். இனிமேல் என்னிடம் பேசாதே என கூறியுள்ளார். எனவே, ஆத்திரமடைந்த பிரசாந்த் ‘‘இவ்வளவு நாள் என்னை காதலித்துவிட்டு இப்போ ஏன் பிடிக்கவில்லை’’ என கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ‘‘எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்க கூடாது’’ என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனியாவின் கழுத்தை அறுத்து பிரசாந்த் கொலை செய்துள்ளார். இவ்வாறு பிரசாந்த் வாக்குமூலத்தில் கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, பிரசாந்தை கைது செய்த பொலிசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.