அமைச்சருடன் சிநேகாவிற்கு தொடர்பு : பேஸ்புக்கில் வெளியான செய்தி!!

603

sineha

அமைச்சர் ஒருவரோடு தன்னை தொடர்புபடுத்தியதால் பொலிசில் புகார் கொடுக்கப்போவதாக நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.

என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சினேகா. இதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் கடந்த வருடம் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அமைச்சர் ஒருவரோடு நடிகை சினேகாவை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சில தினங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தது. சினேகாவின் கணவர் பிரசன்னா இதைக்கண்டித்தார்.

மனைவி மீது அவதூறு பரப்பினால் பொலிசில் புகார் செயப்படும் என்று எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சினேகா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு சென்று தனக்கு எதிராக அவதூறு பரப்பும் பேஸ்புக் கணக்குகள் குறித்து அவர் புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.