வவுனியாவில் கராட்டியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!!

714

 
வவுனியாவின் பிரபல கராட்டி ஆசான் நந்தகுமார் (நந்தன்) அவர்களினால் பயிற்றுவிக்கபட்டு வடமாகாண மற்றும் தேசிய ரீதியில் தங்க பதக்கம் உட்பட பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மாணவ. மாணவியரை கெளரவிக்கும் நிகழ்வு கராட்டி ஆசான் அசனார் ,சிவராஜ் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சந்திரபத்மன், யசோதரன் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களை கெளரவித்திருந்தார்கள்.

பயிற்சிகள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.