பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்ட வர்தா புயலின் தாக்கம் : அதிர்ச்சித் தகவல்!!

563

வர்தா புயலின் தாக்கம் சென்னையையே நிலைகுலைய வைத்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த 7ம் திகதி உருவான காற்று நேற்று சென்னையையே நிலைகுலைந்து போகும் அளவிற்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது

அந்தவகையில் இவ்வாறான தொரு தாக்கம் ஏற்படும் என்று முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும்.

டிசம்பர் 11 முதல் 14 வரை பெருங்காற்று இயற்கை சீற்றம் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. மேலும் டிசம்பர் 17ம் திகதி முதல் 19 வரையிலும், 22, 24,28,29 ஆகிய திகதிளில் பாரிய இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

இதற்கு காரணம் கேதுவும், சுக்ரனும் கும்பத்தில் ஒன்று கூடுவதால் இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும், ஜனவரியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது

இவ்வாறு அறிவித்ததைப் போலவே நேற்று பல பாகங்களிலும் சேதத்தை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது வர்தா புயல்.

பஞ்சாங்கம் கணித்தது போலவே டிசம்பர் 11ல் இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. வர்தா புயல் சென்னையை வளைத்து வளைத்து சூறையாடியது. டிசம்பர் இறுதியில் எப்படியிருக்குமோ பார்க்கலாம்.