ஜனாதிபதி ஐயா ‘41808’இற்கு ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள் : குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

466

யாழ்ப்பாணம் பொது நூல் நிலையத்திற்கு முன்பாக இன்று(14.12.2016) காலை தொடக்கம் ஒரு குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பம் கொக்குவிலை சேர்ந்தவர்கள் என்றும், தமது காணிப் பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை பெற்று தரக்கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் குடும்பப் பெண்ணும் அவரது குழந்தை மற்றும் முதியவர் ஒருவரும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.