லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் இன்று (15) முச்சக்கர வண்டி ஒன்று 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லிந்துலை பாமஸ்ட்டன் பகுதியிலிருந்து லிந்துலை வைத்தியசாலை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இரண்டு பெண்களும், 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரும் சாரதியுமே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






