சேலை அணிய ஆசைப்­பட்ட கொரிய யுவ­தியின் உடலை வரு­டிய ஆடை விற்­பனை நிலைய ஊழியர் கைது!!

591

உல்­லாசப் பய­ணி­யாக இலங்கை வந்­துள்ள கொரிய யுவதி ஒருவர், நுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள ஆடை விற்­பனை நிலையம் ஒன்றில் உடை­மாற்றிக் கொண்­டி­ருந்த போது அவ­ரது உடம்பை வரு­டி­ய­தாக கூறப்­படும் நபர் ஒருவரை நுவ­ரெலியா பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இலங்கைப் பெண்­களை போன்று சேலை அணிந்து பார்க்கும் ஆசையில் 24 வய­தான மேற்­படி கொரிய யுவதி நுவரெ­லி­யா­வி­லுள்ள பிர­பல ஆடையக ­மொன்­றுக்கு சென்று சேலை ஒன்­றினை கொள்­வ­னவு செய்துள்ளார்.

இலங்கை கலா­சா­ரத்­துக்­க­மைய தான் சேலையை அணிய விரும்­பு­வ­தா­கவும் தனக்கு சேலை அணி­விப்­ப­தற்கு உதவி புரி­யு­மாறும் அந்த யுவதி குறித்த ஆடை விற்­பனை நிலைய முகா­மை­யா­ள­ரிடம் தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து அம்­மு­கா­மை­யாளர் ஆடை­ய­கத்­தி­லுள்ள ஊழி­ய­ரொ­ரு­வரை அழைத்து சேலையை அணி­விக்க யுவ­திக்கு உதவி புரி­யு­மாறு தெரி­வித்­துள்ளார்.

இ­த­னை­ய­டுத்து விற்­பனை நிலை­யத்­தி­லுள்ள ஆடை­மாற்றும் அறைக்கு கொரிய யுவ­தியை அழைத்து சென்று அவ­ருக்கு சேலை அணி­வித்து கொண்­டி­ருக்கும் போது அவ­ரது உடலை குறித்த ஊழியர் ஸ்பரிசம் செய்­துள்ளார்.

இது தொடர்­பில் கொரிய யுவதி 13 ஆம் திகதி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­த­னை­ய­டுத்து சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டார்.

நுவ­ரெ­லிய பொலிஸ் தலை­மை­ய­கத்தின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனக ஜய­சிங்­கவின் ஆலோ­ச­னைக்­க­மைய சந்தேக நபர் விசாரணைக்கு உட்படுத்தப்­ப­டு­வதுடன் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் நுவரெலியா மாவ­ட்­ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.