இரகசியத் தொடர்பை பேண மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

541

தன்னுடன் இரகசியத் வைத்திருந்த விவாகமான பெண்ணொருவர் தனது தொடர்பை முறித்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

சந்தேகநபரான குறித்த பொலிஸ் அதிகாரி, பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து அந்தப் பெண்ணையும் அவரது இரு மகள்களையும் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார்.

எனினும், குறித்த சந்தேகநபர் நேற்று வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹோமாகம பொலிஸில் பணியாற்றியவர் எனவும், இதற்கு முன் வெலிக்கடை பொலிஸில் பணியாற்றியபோது நாவல பிரதேசத்திலுள்ள 42 வயதான இந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிதுகாலத்தின் பின் அந்தப் பெண் தனது தொடர்பை முறித்துக்கொண்டதால் கோபமுற்ற சந்தேகநபர் இந்தக் கத்திக்குத்தில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்பேரில் இவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.