வாகன சாரதிகளுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!!

885

பண்டிகை காலத்தில் மது போதையின் கீழ் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வது தொடர்பில் விசேட திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையக பிரிவின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,சாரதிகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு சிவில் ஆடைகளுடன் பல பொலிஸ் அதிகாரிகளை ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவுத் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, பண்டிகை காலத்தில் விடுதிகள் மற்றும் உணவகங்களை கண்கானிப்பதற்கும் விசேட குழுக்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார சேவைகள் ஆய்வாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் விடுதிகள் மற்றும் உணவகங்களை கண்கானிப்பதற்கு 2,100 பேர் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார சேவைகள் ஆய்வாளர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதப் பாவனைக்கு தகாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் குறித்து 011-263-5676 என்ற தொலைபேசி இலக்கத்தினூடு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களின் நலன் கருதி அவசர அழைப்பு 24 மணித்தியாலங்கள் சேவையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.