நான்கு ஆண்களுடன் திருமணம் செய்து பொலிசில் வசமாக சிக்கிய பெண்!!

530

நகை மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரை சேர்ந்தவர் மேகா பார்கவ் (28).

இவர் மீது கொச்சியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் தன்னை திருமணம் செய்த மேகா தனது 15 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தலைமறைவாகிவிட்டார் என பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து தனது ஊரில் இருந்த மேகா மற்றும் அவரது சகோதரி பிராச்சி ஆகியோரை பொலிசார் கைது செய்தார்கள்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், தற்போது புகார் கொடுத்த ஜஸ்டீன் மேகாவின் நான்காவது கணவர் ஆவார்.

இதற்கு முன்னரே மூன்று பேரை திருமணம் செய்து அவர்களிடமும் பணம் மற்றும் நகையை மேகா ஏமாற்றியுள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர்.

இதனிடையில், தான் பல பேரை திருமணம் செய்தது உண்மை தான் எனவும், தான் யாரையும் ஏமாற்றவில்லை என மேகா பார்கவ் கூறியுள்ளார்.