சசிகலா முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது : சீமான் பரபரப்புப் பேட்டி!!

600


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக பாஜகவினர் கருத்தும் டெல்லி பாஜகவினரின் கருத்தும் முரணாக உள்ளது.

இன்னும் ஒரு மாதமே ஜல்லிக்கட்டுக்கு உள்ள நிலையில், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதில் நம்பகத்தன்மை இல்லை. தடை வந்தாலும் தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டை அதை மீறி நடத்துவோம் என கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் பலருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. மருத்துவமனையில் இருந்து கொண்டே பல கோடி மக்களை ஒரு ஓடியோ மூலம் தொடர்பு கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அதிமுகவின் அடுத்த பொது செயலர் யார் என்பதை அவர்கள் பொதுகுழு தான் முடிவு செய்ய வேண்டும். அதே போல தற்போது சென்னையின் ஆர்.கே நகர் தொகுதி காலியாக உள்ளது.

அங்கு சசிகலா நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமிழக முதல்வராக கூட அவருக்கு வாய்ப்புள்ளது. அவர் முதல்வர் ஆவதை அவர் கட்சியினர் விரும்புவதால் அதை யாரும் தடுக்க முடியாது எனவும் சீமான் கூறியுள்ளார்.