ஏற்படப் போகும் வறட்சியிலிருந்து மக்களை பாதுகாப்பது எவ்வாறு?

471


எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படும் கடும் வறட்சியை எதிர்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடியுள்ளதுடன் விஷேட செயலணி ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத்தில் இருந்து ஏற்பட போகும் வறட்சி குறித்து நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்குமாக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மின் தடை ஏற்படாதிருக்கவும் , குடிநீர் விநியோகிப்பது மற்றும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்குவது உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதியளவு நிவாரணங்கள் வழங்குவது தொடர்பாகவும் திட்டமிடப்பட்டது.