கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமார் வார்னுஜா வயது 17 எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை இறுதி யுத்த காலத்தில் இறந்துள்ள நிலையில் தாய் உயர்தரம் கற்கும் மாணவியை யாழ்ப்பாணத்தில் படிப்பித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.