பரீட்சை எழுத மது குடித்துவிட்டு வந்த மாணவன்!!

740

alcoholism

தமிழ்நாட்டில் பாடசாலை மாணவன் ஒருவன் காலண்டு பரீட்சை எழுத மது அருந்திவிட்டு வந்ததால் பள்ளியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் காலாண்டு பரீட்சைகள் தொடங்கின.

நேற்று முன்தினம் பிற்பகல் நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மது வாடை வீசியது. ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் பிளஸ் 1 வரலாற்று பிரிவு மாணவர் ஒருவர் மது அருந்திவிட்டு முழு போதையில் தேர்வு எழுத வந்திருப்பது தெரியவந்தது.



இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொலிசார் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார்பக்கீர் தகவல் தெரிவித்துள்ளார். பொலிசார் பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மது குடித்து விட்டு வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்பு இதுதொடர்பாக கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மாணவரின் பெற்றோரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவரை வரும் 20 நாள் தற்காலிக நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.