14 வருடங்களின் பின்னர் விஜயுடன் நடிக்கும் ஜோதிகா!!

885

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பைரவா படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் நாயகியாக பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.
கதைப்படி இப்படத்தில் 3 நாயகிகள் நடிக்கவுள்ளார்கள், ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் நாயகிகளாகவும், ஜோதிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

விரைவில் படப்பிடிப்பு திகதிகள் முடிவானவுடன் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .

குஷி மற்றும் திருமலை படத்துக்குப் பிறகு விஜய் – ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் இது, சென்னையில் தொடங்கப்படவுள்ள முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் 2 ஆம் கட்டப் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.