பணம் தர மறுத்த மனைவி : தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்த கணவன்!!

1197

தனது மனைவியிடம் பணம் கேட்டு தர மறுத்தமையின் காரணமாக தனக்கு தானே கணவன் தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

35 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தற்கொலை செயதுகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி மரண விசாரனை அதிகாரியிடம் சாட்சியமளிக்கையில், உயிரிழந்த தனது கணவனும் தானும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டோம்.

மேசன் தொழில் செய்து வரும் தனது கணவருக்கு குடி பழக்கம் உண்டு. இதன் காரணமாக தாம் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.

கடந்த 24ஆம் திகதி மது போதையில் வந்த தனது கணவர் தன்னிடம் பணம் தருமாறு கேட்டார். எனினும், தான் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்தையடுத்து தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டார்.

எனினும், அவரை காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதிலும், சிகிச்சை பலன் இன்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.